யாருக்கும் சுவடில்லை இங்கு
ஆசிரியர் வாகீஸ்வரி
அத்தியாயம் 1
காசி என நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது முதலில் அங்கே உள்ள
கோவில்களும் கரைபுரண்டு ஓடும் கங்கை நதியும்தான். இங்கே இன்னொரு
சிறப்பும் உள்ளது, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பனாரஸ்
பட்டுச்சேலைகள்தான்.
ஆம் காசிப்பட்டு என்றும் பனாரஸ் பட்டு என்றும் சொல்லப்படும்
இப்புடவைகள் கொஞ்சம் எடையுள்ளதாகவே இருக்கும். நுட்பமான புரோகேட்
ஜரிகை வேலைப்பாடுகள் செய்திருப்பதாலும் சில நேரம் நம் விருப்பத்திற்கு
ஏற்ப தங்கம், வெள்ளி நூலாலும் வேலைப்பாடுகளை செய்து கொடுப்பார்கள்.
காசியின் மென்மையான பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் புத்தர் முதல்
அரசர் வரை இக்காலத்திலும் சிறப்பு வாய்ந்தவையாகவே இருக்கிறது என்பது
பெருமைக்கு உரிய விஷயமாகும்.
அதிகாலை நேரம் பிரம்ம முகூர்த்தம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவாத,
லேசான இருள் விழக ஆரம்பித்திருந்த காலைப்பொழுது அது. ஆதவன்
மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நேரம் ஆதலால் இனி இருள் விலகியே
ஆகவேண்டும் அத்தருணத்தில்.
உடலே உறையும் வண்ணம் சில்லிடும் காற்று மேனியைத் தழுவிப்போக,
அது போதாதெனக் கூடவே பனிப்புகை வேறு சுற்றிலும் பரவியிருந்தது.
எதிரே நிற்பவர் கூடத் தெரியாமல் பனி மூடியிருந்தது.
வாகனங்களில் செல்வோருக்கு அது ஒரு சவாலான பயணமாகவே இருக்கும்
நிச்சயமாக.
கடும் பனியில் உடலை சுற்றியிருக்கும் கம்பளியையும் மீறி குளிர்
சோதித்தாலும். கடுமையான குளிரில் உடல் நடுங்கினாலும், கண் முன்னே
பரந்து விரிந்திருக்கும் அழகிற்கு அது ஈடு இணை இல்லைதான். எப்படிப்பட்ட
குளிராய் இருந்தாலும் அது உறைப்பதே இல்லை அக்கணம்.
ஆம்! கண்ணெதிரே பிரம்மாண்டமாய்ப் பரந்து விரிந்திருக்கும் கங்கை
எத்தனை முறை பார்த்தாலும் நம் கண்களை பிரம்மிக்கச் செய்கின்றது. ஒரு
கரையில் இருந்து பார்க்கையில் அதன் மறுகரை பார்வையில் தட்டுப்படாது.
அத்தனைக்கு அத்தனை அகன்ற நீர் வழித்தடம் கொண்டவள் அவள்.
பனிசூல் காலைப்பொழுதின் நிசப்தத்தில் கம்பீரமாய் ஆர்ப்பரிப்பில்லாது
அமைதியாய் நிற்கிறாள் கங்கை அன்னை.
கம்பராமாயணத்தில் தனியொரு இடம்பெற்றது கங்கை காண் படலம். அதில்
குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர். படகுகள் சூழ் கங்கை என.
அக்காலம் முதல் இன்று வரை அனைத்துப் படித்துறைகளிலும்
நின்றிருக்கிறது, ஒருவர் அல்லது அல்லது சிலர் அமரக்கூடிய சிறு சிறு
படகுகள்.
சிலருக்கு கங்கை நதியில் தியானிக்க விருப்பம் இருப்பின் அதற்கான
வாய்ப்பையும் வழங்குவார்கள் படகோட்டிகள். படகை நடுகங்கையில்
செலுத்தி அசையாமல் நிறுத்திவிடுவார்கள். விரும்பிய நேரம் வரை கங்கை
அன்னையுடன் இருக்கலாம்.
அப்படிப்பட்ட காசி மாநகரில்தான் பனாரஸ் என்றும் வாரணாசி எனவும்
அழைக்கப்படும் நகரம் கங்கை கரையோரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது.
அத்தியாவசிய வீதியில் நானும் அத்தியாவசியமானவன்தான் என்பதுபோல
நின்றிருந்தது அந்தப் பாரம்பரிய இல்லம்.
அந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட பத்துக் குடும்பங்கள் இருப்பார்கள்,
கூட்டுக்குடும்பம். வேதங்களை கரைத்துக் குடித்திருக்கும் மகான்கள் அவர்கள்.
காசியில் ரங்காச்சாரி என்றால் தெரியாதவர்கள் எவருமில்லை. அவரிடம்
எல்லோருக்குமே பயம் கலந்த மரியாதை இருக்கவே செய்யும்.
நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ஒல்லியான உடல்வாகு அவருக்கு.
பட்டுவேஷ்டியும் மார்பில் தவழும் பூணூலும் அவருக்கு இன்னும்
கம்பீரத்தைக் கொடுக்கவே செய்தது. மஞ்சளின் சாயலில் உள்ள மேனியில்
திருநீறு பூசி, ருத்ராட்ச மாலைகள் மார்பில் தவழ, அங்கவஸ்திரம் அதற்கு
இன்னும் சிறப்பூட்டும் அவருக்கு.
அறிவுக்கூர்மையும் தீட்சண்யமும் மிக்க அவரது கூர் விழிகள் எதிரில்
நிற்பவரை ஒரு நொடியில் எடை போட்டுவிடும். ஆணவமும் செருக்கும்
அதிகம் கொண்ட மாமனிதர் எனவும் சொல்லலாம்.
ரங்காச்சாரி எள் என்றால் எண்ணையாக நிற்பார் அவரது தம்பி வரதாச்சாரி.
அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டார். அத்தனை பயபக்தி
ரங்காச்சாரியின் மீது. அண்ணனுக்கு உதவியாக பாடசாலையில் நிர்வாகம்
செய்கிறார்.
ரங்காச்சாரிக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் போகவே. தன் குருவிடம்
பிரம்மச்சாரியாக தீட்சை பெற்றுக்கொண்டார்.
வேதங்களை கற்பிப்பதிலும் சிவனின் பாதங்களை சரண் அடைவதிலும் தன்
கவனத்தை செலுத்தினார்.
தன் தம்பி வரதனுக்கு ராதாம்மாவைத் திருமணம் செய்துவைத்தார்.
ராதாம்மாவும் கணவருக்கு அடங்கிய பெண்ணாக குடும்பத்தைப்
புரிந்துகொண்டு அதன்படியே நடந்துகொண்டார்.
ரங்காச்சாரிக்கு குடும்பப் பொறுப்புகள் கொஞ்சம் குறைந்தது ராதாவின்
சாமர்த்தியத்தால். வீட்டுப் பொறுப்புகளை அவர் நிர்வகிக்க, மற்றவைகளை
வரதரும் அவரும் கவனித்துக்கொள்ள சிறப்பாகவே சென்றது நாட்கள்.
ராதாம்பிகை நிறைமாத கர்ப்பிணியாய் இருக்க, தன் வாரிசின்
வரவுக்காகத்தான் இப்பொழுது மருத்துவமனையில் காத்திருக்கிறார் வரதர்.
முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என சிவனிடம்
வேண்டி நின்றார் சாதாரண மனிதனாய். எப்படிப்பட்ட ஞானியாக இருப்பினும்
இந்த விஷயத்தில் அடிமட்ட புத்தியே இருந்தது அவருக்கு.
ஆண்குழந்தையாக இருப்பின் அடுத்த மகவைப் பற்றிய பயம் இல்லாது
இருக்கலாம். அடுத்து பிறப்பது ஆணோ பெண்ணோ எனப் பதறும் அவசியமும், என்ன
குழந்தை எனப் பயமில்லாமலும் இருக்கலாம். இந்த எண்ணத்திலேயே
தவியாய்த் தவித்தார்.
ஆதவன் மெல்ல மெல்லத் தன் கரங்களை விரித்து வெளிச்சத்தைக் கொடுக்க
ஆரம்பித்தான், இருள் முற்றிலும் விலக வெளிச்சம் பரவலானது.
அந்த நேரத்தில் குழந்தையின் வரவு ஆரம்பமானது.
ராதாம்பிகையின் அழுகை சப்தம் கேட்கக் கேட்க, கணவனாய் தந்தையாய்
உள்ளம் துடிக்க, அவரது உதடுகள் விடாமல் சிவனின் நாமத்தை
சொல்லிக்கொண்டே இருந்தது, இம்முறை மனைவியின் ஆரோக்கியத்தை
நினைத்துப் பதறினார். எதுவோ ஒண்ணு நல்லபடியாக பிறக்கட்டும், என்ற
எண்ணம் உதித்தது அவருக்கு.
தாய் தகப்பனைப் படுத்தி எடுத்துவிட்டு இவ்வுலகை எட்டிப் பார்த்தது
மகாலட்சுமியின் அம்சமான அழகான பெண்குழந்தை.
சிறிது நேரத்தில் தாதி குழந்தையை அவர் கையில் கொண்டு வந்து
கொடுத்தார்.
"பெண்குழந்தை பிறந்திருக்கு, தாயும் சேயும் நலமா ஆரோக்கியமா
இருக்காங்க" அனைவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றார்
அவர்.
வரதாச்சாரியின் கரத்தில் இருந்த குழந்தையின் அழகில் அனைவரும்
மயங்கிப் போனார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப் பொலிவுடன் மின்னியது.
பெண்ணரசி தேவதையைப் போலவே குட்டி உதடுகளை நெளித்து
புன்னகையை அனைவருக்கும் கொடுக்க,அதில் மயங்கினார் வரதாச்சாரி,
ஒரு நிமிடம் ஆண்குழந்தை இல்லையே என்ற கவலையை மறந்து
என் மகள் இவள் என்ற கர்வமும் வந்தது.
அவருக்கு வயதின் காரணமாய் கைகளில் லேசாய் நடுக்கம் இருக்க, குழந்தையைக்
கையால் எடுக்க முடியாமல், மகன் கையில் இருந்த பேத்தியை எட்டிப்
பார்த்தார் அவரது தாய், "அடடா எத்தனை அழகா இருக்கா குழந்தை"
வரதாச்சாரியின் அம்மா கொஞ்சினார்.
“பையனா இருந்திருந்தா ரெட்டிப்பு சந்தோஷம் கிடைச்சிருக்கும் அம்மா.
பொண்ணாப் போயிட்டாளே. இனி அடுத்தது பிறந்து, ஒருவேளை அதுவும்
பொண்ணாவே போயிட்டா நான் என்ன பண்ணட்டும்?” வரதர் தன் மகளையே
பாசமாய் கண்களில் கனிவுடன் பார்த்தவாறு மனத்தாங்களுடன் சொன்னார்.
“அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காதேப்பா. பையனோ பொண்ணோ
ஆரோக்கியமாய் பிறந்திட்டான்னு சந்தோஷப்படனும் நாம. அதைவிட்டுட்டு
குழந்தை மேல வெறுப்பைக் கொட்டறது நல்லதுக்கு இல்லைப்பா” மகனைக்
கண்டித்தவர், “நம்ம வீட்டுலயே முதன் முதலா பிறந்த பெண்குழந்தை இது வரதா.
மூணு தலைமுறையா பொண்ணுங்க பிறக்கவே இல்லை. என்னவோ சாபம்னு
சொன்னாங்க. உன் அப்பா எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு அவர்
காலத்துல பிறக்கவே இல்லை. பரிகாரம் பண்ணியும் தப்புகள் நடந்தா அதுக்கு
மதிப்பே இருக்காதே.
உங்கண்ணனும் சும்மா இல்லை ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கிட்டான்..
அதுவும் யார்கிட்ட பகைச்சுக்கக் கூடாதோ அவங்ககிட்ட தீராத பகையை
வாங்கிக்கிட்டான். எனக்கென்னவோ அது இன்னும் முடியலைன்னுதான்
தோணுது” கண்கள் கலங்க வேதனையுடன் சொன்னவர், வடக்குப்பக்கம்
யோசனையாகப் பார்த்தார்.
“அண்ணனைத் தப்பாப் பேசாதீங்கம்மா. நமக்காக வாழ்க்கையையே தியாகம்
பண்ணியிருக்கார் அவர்” வரதர் தாயின் பேச்சை மறுத்தார்.
“அவனை தப்பா சொல்ல என்னப்பா இருக்கு. ஆண்கள் செய்யும் தப்புகளை
தப்புன்னு சுட்டிக்காட்டும் உரிமை பொண்ணுங்களுக்கு எங்க இருக்கு?.
எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கோம் நாங்களே. உங்கப்பா
காலத்தில் இருந்து உங்க காலம் வரைக்கும் நான் கேள்வி கேக்கக்காம
அடங்கி தானே போறேன். உன் அண்ணங்கிட்ட நின்னு பேசறதுக்கு
விடுவானா? உனக்கென்ன தெரியும்னு அடக்கிட்டு போய்டுவான்..
ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோப்பா.
நீ பண்ணியிருக்க புண்ணியமோ இல்ல ராதாவுக்கான அனுக்கிரகமோ
தெரியலைப்பா. இப்ப உனக்கு பொண்ணு பிறந்திருக்கு வரதா, வந்த
மகாலட்சுமியை வேணாம்னு சொல்லிட்டு தப்பு பண்ணிக்கிட்டு இருக்காதே.
தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க வேணாம் நீயும்” கண்டித்தார் நல்ல
தாயாய்.
“அதுவும் சரிதானம்மா. எல்லாம் பரமேஸ்வரின் விருப்பம்தான். நம்ம கையில்
என்ன இருக்கு? என் மகளை இளவரசியாய் வளர்த்திக் கொடு நீ. அதுபோதும்
எனக்கு” வரதர் வெளியே சந்தோஷமாக சொன்னாலும் மனதில்
வருத்தப்பட்டார்.
“நான் எதுக்கு இருக்கேன். ராணியாட்டம் வளருவா என் பேத்தி” பேத்தியை
செல்லம் கொஞ்சினார் பாட்டி.
அன்றே ராதாம்மாவை வேறு அறைக்குள் மாற்றிவிட்டனர், குழந்தையை
ராதாம்மா கையில் கொண்டு போய் வைக்க தன் மகளின் நெற்றியில் முத்தம்
பதித்தவர், “குழந்தை அழகா இருக்காங்க” சந்தோஷப்பட்டார்.
“ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன் ராதா” வரதர் கவலை நிறைந்த
புன்னகையுடன் சொன்னாலும் மகளின் கன்னத்தை செல்லமாய்த்
தட்டியவாறே கொஞ்சினார்.
“அதனால் என்னங்க? அடுத்த குழந்தை பையனா பெத்து தரேன்” ராதாம்மா
நிறைவான சிரிப்புடன் கணவனைத் தேற்றினார்.
ஒரு வாரம் செல்ல..
குழந்தையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்
வரதாச்சாரி. முறைப்படி பிறந்த வீட்டிற்குத்தான் ராதாம்மா செல்ல வேண்டும்.
ராதாம்மாவின் தாயார் வேதவதி அதற்கான ஏற்பாடுகளைத்தான்
செய்திருந்தார். ஆனால் தலைக்கணம் மிக்க ரங்காச்சாரியோ மறுத்துவிட்டார்.
“எங்க வீட்டுல வளரட்டும்” என புகுந்த வீட்டுக்கே வருமாறு கண்டிப்புடன்
சொல்லவே. ராதாவின் பெற்றவர்களுக்கு மனதுக்குள் வருத்தம் இருந்தாலும்
விட்டுக்கொடுத்துப் போனார்கள் பெருந்தன்மையாய்.
தங்கள் வீட்டின் மகாலட்சுமியை வரவேற்பதற்காய் அந்த வீடே
சந்தோஷமாய்க் காத்திருந்தது.
“ஏம்மா மருமகளே ஆரத்தியை கரைச்சு எடுத்துட்டியா?” கேட்டவாறே வீட்டு
வாசலில் கால் எடுத்து வைத்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி
விழுந்தார் ராதாம்மாவின் மாமியார்.
வந்த வண்டியிலேயே திரும்ப அழைத்துப் போய் சிகிச்சை செய்தும்
பலனில்லை இறந்து போனார் வரதரின் தாயார்.
நொடியில் அந்த வீட்டின் தோற்றங்களும் மனநிலைகளும் மாறிவிட, துக்க
வீடாக மாறிப் போனது. அதுமட்டும் இல்லாமல் துக்க வீடு என்பதால் பூஜை
அறையில் உள்ள தீபத்தை அமர்த்திவிடப் போக, பூஜை அறையில்
தீப்பிடித்தது கவனக்குறைவால்.
அது ஒருபக்கம் பரபரப்பாய் ஆனது. அது போதாதென தீக்காயமும் பட்டுவிட,
நடப்பதை எல்லாம் அவதானித்து இருந்த வரதரின் அண்ணா ரங்காச்சாரிக்கு
மனதில் நெருடல் எழுந்தது.
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை இவள். இவள்
வரவு குடும்பத்திற்கு நன்மையைத் தருமா? யோசனையில் ஆழ்ந்தவர்
யாரிடமும் பேசாமல் தன் தாயின் இறுதிக் காரியங்களை கவனிக்க
ஆரம்பித்தார். தாய்க்கு தலைப்பிள்ளை காரியம் செய்யவேண்டுமென்பது மரபு
ஆதலால் ரங்காச்சாரி தன் கவனத்தை திசை திருப்பினார் சற்று
நெருடலுடனேயே..
வந்திருப்பவர்களின் வாயில் அந்தக் குழந்தையின் நேரமும் ராசியுமே
அறைபட்டது. “பொண்ணு பிறக்கணும்னு தவமா தவம் இருந்தாங்க. ஆனா
பாரேன் பிறந்தும் ராசியில்லாம போயிடுச்சு.. இப்பவே இப்படின்னா நாளாக
ஆக இன்னும் என்னென்ன நடக்குமோ” இப்படி காதில் விழுமாறும்,
நேரடியாகவும் பேசப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை என்றால் குழந்தையின்
பெற்றோர்களுக்கோ நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போல
இருந்தது.
ஒவ்வொரு தாய்தகப்பனுக்கும் தான் உயிரைக் கொடுத்துப் பெற்ற குழந்தை
என்றால் அபூர்வம் அல்லவா. அவன் நல்லவனோ கெட்டவனோ
எப்படியிருந்தாலும் அவனுக்காக அடிமனது துடிக்கும்.
ராதாம்மாவுக்கும் வரதாச்சாரிக்கும் அப்படித்தான், இப்பொழுதுதான்
உலகத்தை எட்டி பார்த்திருக்கும் தன் குழந்தையின் நலனே பிரதானமாக
இருக்க, குழந்தையையும் மனைவியையும் எந்தக் கெட்ட சொல்லும் காதில்
விழாதவண்ணம் ராதாம்மாவின் தாய்வீட்டில் விட்டுவிட்டு வந்தார் வரதர்.
“திரும்ப அழைச்சிட்டுப் போக வருவீங்கதானே?” கண்களில்
அலைப்புறுதலோடு கேட்டார் ராதாம்மா. அவர் காதில் விழுந்த பேச்சுகள்
அப்படியிருக்க, அவரது சஞ்சலமும் நியாயமாகவே இருந்தது.
“நான் சிவனடியார் ராதா. எனக்கு நீதான் விசாலாட்சி. இந்த ஜென்மத்துக்கு
நீயே போதும். அடுத்த ஜென்மமே நமக்கு வேணாம்னு அந்த சிவனை
பிரார்த்திக்கறேன் அனுதினமும்” மனைவியிடம் சொன்ன வரதர் திரும்பியும்
பாராமல் சென்றார் மனைவியின் அழுத முகம் பார்க்கத் தெம்பில்லாமல்..
போகும் போது மனைவி மகளைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளச்
சொல்லிவிட்டுச் செல்லும் மாப்பிள்ளையைக் கவலையாய்ப் பார்த்தவர், “கை
நனைக்காம போறாரே மாப்பிள்ளை?” ராதாவின் தாய் வேதவதி
கவலையாய்க் கேட்டார்.
ஒரே மருமகன் அவருக்கு, உபசரிக்க விரும்பினார்.
தன் பெண் வசதி வாய்ப்பில்லாமல் இருக்கும் ஏழை அந்தணர் குடும்பத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதகமும் மனசும் பொருந்திப் போக ஊரே
மெச்சும்படி திருமணம் செய்துகொண்டார் என்று , மதிப்பும் மரியாதையும்
அதிகமாகவே இருந்தது அவருக்கு மருமகன் மீது.
“அவர் வீட்டில் காரியம் நடந்துட்டு இருக்கையில் நம்ம வீட்டில் விருந்து
சாப்பிடுவாரா வேதா? அடக்கம் பண்ணி முடிக்க வரை பச்சை தண்ணி கூடக்
குடிக்க கூடாது தெரியாதா உனக்கு?” சிவநாதர் மனைவிக்கு எடுத்துச்
சொன்னார்.
“அதுவும் சரிதான். நீ வாடா கண்ணா உனக்கு பாட்டி கதை சொல்றேன்” என
மார்போடு அணைத்துக்கொண்டார் குழந்தையை.
ஆசிரியர் வாகீஸ்வரி
அத்தியாயம் 1
காசி என நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது முதலில் அங்கே உள்ள
கோவில்களும் கரைபுரண்டு ஓடும் கங்கை நதியும்தான். இங்கே இன்னொரு
சிறப்பும் உள்ளது, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பனாரஸ்
பட்டுச்சேலைகள்தான்.
ஆம் காசிப்பட்டு என்றும் பனாரஸ் பட்டு என்றும் சொல்லப்படும்
இப்புடவைகள் கொஞ்சம் எடையுள்ளதாகவே இருக்கும். நுட்பமான புரோகேட்
ஜரிகை வேலைப்பாடுகள் செய்திருப்பதாலும் சில நேரம் நம் விருப்பத்திற்கு
ஏற்ப தங்கம், வெள்ளி நூலாலும் வேலைப்பாடுகளை செய்து கொடுப்பார்கள்.
காசியின் மென்மையான பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் புத்தர் முதல்
அரசர் வரை இக்காலத்திலும் சிறப்பு வாய்ந்தவையாகவே இருக்கிறது என்பது
பெருமைக்கு உரிய விஷயமாகும்.
அதிகாலை நேரம் பிரம்ம முகூர்த்தம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவாத,
லேசான இருள் விழக ஆரம்பித்திருந்த காலைப்பொழுது அது. ஆதவன்
மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நேரம் ஆதலால் இனி இருள் விலகியே
ஆகவேண்டும் அத்தருணத்தில்.
உடலே உறையும் வண்ணம் சில்லிடும் காற்று மேனியைத் தழுவிப்போக,
அது போதாதெனக் கூடவே பனிப்புகை வேறு சுற்றிலும் பரவியிருந்தது.
எதிரே நிற்பவர் கூடத் தெரியாமல் பனி மூடியிருந்தது.
வாகனங்களில் செல்வோருக்கு அது ஒரு சவாலான பயணமாகவே இருக்கும்
நிச்சயமாக.
கடும் பனியில் உடலை சுற்றியிருக்கும் கம்பளியையும் மீறி குளிர்
சோதித்தாலும். கடுமையான குளிரில் உடல் நடுங்கினாலும், கண் முன்னே
பரந்து விரிந்திருக்கும் அழகிற்கு அது ஈடு இணை இல்லைதான். எப்படிப்பட்ட
குளிராய் இருந்தாலும் அது உறைப்பதே இல்லை அக்கணம்.
ஆம்! கண்ணெதிரே பிரம்மாண்டமாய்ப் பரந்து விரிந்திருக்கும் கங்கை
எத்தனை முறை பார்த்தாலும் நம் கண்களை பிரம்மிக்கச் செய்கின்றது. ஒரு
கரையில் இருந்து பார்க்கையில் அதன் மறுகரை பார்வையில் தட்டுப்படாது.
அத்தனைக்கு அத்தனை அகன்ற நீர் வழித்தடம் கொண்டவள் அவள்.
பனிசூல் காலைப்பொழுதின் நிசப்தத்தில் கம்பீரமாய் ஆர்ப்பரிப்பில்லாது
அமைதியாய் நிற்கிறாள் கங்கை அன்னை.
கம்பராமாயணத்தில் தனியொரு இடம்பெற்றது கங்கை காண் படலம். அதில்
குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர். படகுகள் சூழ் கங்கை என.
அக்காலம் முதல் இன்று வரை அனைத்துப் படித்துறைகளிலும்
நின்றிருக்கிறது, ஒருவர் அல்லது அல்லது சிலர் அமரக்கூடிய சிறு சிறு
படகுகள்.
சிலருக்கு கங்கை நதியில் தியானிக்க விருப்பம் இருப்பின் அதற்கான
வாய்ப்பையும் வழங்குவார்கள் படகோட்டிகள். படகை நடுகங்கையில்
செலுத்தி அசையாமல் நிறுத்திவிடுவார்கள். விரும்பிய நேரம் வரை கங்கை
அன்னையுடன் இருக்கலாம்.
அப்படிப்பட்ட காசி மாநகரில்தான் பனாரஸ் என்றும் வாரணாசி எனவும்
அழைக்கப்படும் நகரம் கங்கை கரையோரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது.
அத்தியாவசிய வீதியில் நானும் அத்தியாவசியமானவன்தான் என்பதுபோல
நின்றிருந்தது அந்தப் பாரம்பரிய இல்லம்.
அந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட பத்துக் குடும்பங்கள் இருப்பார்கள்,
கூட்டுக்குடும்பம். வேதங்களை கரைத்துக் குடித்திருக்கும் மகான்கள் அவர்கள்.
காசியில் ரங்காச்சாரி என்றால் தெரியாதவர்கள் எவருமில்லை. அவரிடம்
எல்லோருக்குமே பயம் கலந்த மரியாதை இருக்கவே செய்யும்.
நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ஒல்லியான உடல்வாகு அவருக்கு.
பட்டுவேஷ்டியும் மார்பில் தவழும் பூணூலும் அவருக்கு இன்னும்
கம்பீரத்தைக் கொடுக்கவே செய்தது. மஞ்சளின் சாயலில் உள்ள மேனியில்
திருநீறு பூசி, ருத்ராட்ச மாலைகள் மார்பில் தவழ, அங்கவஸ்திரம் அதற்கு
இன்னும் சிறப்பூட்டும் அவருக்கு.
அறிவுக்கூர்மையும் தீட்சண்யமும் மிக்க அவரது கூர் விழிகள் எதிரில்
நிற்பவரை ஒரு நொடியில் எடை போட்டுவிடும். ஆணவமும் செருக்கும்
அதிகம் கொண்ட மாமனிதர் எனவும் சொல்லலாம்.
ரங்காச்சாரி எள் என்றால் எண்ணையாக நிற்பார் அவரது தம்பி வரதாச்சாரி.
அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டார். அத்தனை பயபக்தி
ரங்காச்சாரியின் மீது. அண்ணனுக்கு உதவியாக பாடசாலையில் நிர்வாகம்
செய்கிறார்.
ரங்காச்சாரிக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் போகவே. தன் குருவிடம்
பிரம்மச்சாரியாக தீட்சை பெற்றுக்கொண்டார்.
வேதங்களை கற்பிப்பதிலும் சிவனின் பாதங்களை சரண் அடைவதிலும் தன்
கவனத்தை செலுத்தினார்.
தன் தம்பி வரதனுக்கு ராதாம்மாவைத் திருமணம் செய்துவைத்தார்.
ராதாம்மாவும் கணவருக்கு அடங்கிய பெண்ணாக குடும்பத்தைப்
புரிந்துகொண்டு அதன்படியே நடந்துகொண்டார்.
ரங்காச்சாரிக்கு குடும்பப் பொறுப்புகள் கொஞ்சம் குறைந்தது ராதாவின்
சாமர்த்தியத்தால். வீட்டுப் பொறுப்புகளை அவர் நிர்வகிக்க, மற்றவைகளை
வரதரும் அவரும் கவனித்துக்கொள்ள சிறப்பாகவே சென்றது நாட்கள்.
ராதாம்பிகை நிறைமாத கர்ப்பிணியாய் இருக்க, தன் வாரிசின்
வரவுக்காகத்தான் இப்பொழுது மருத்துவமனையில் காத்திருக்கிறார் வரதர்.
முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என சிவனிடம்
வேண்டி நின்றார் சாதாரண மனிதனாய். எப்படிப்பட்ட ஞானியாக இருப்பினும்
இந்த விஷயத்தில் அடிமட்ட புத்தியே இருந்தது அவருக்கு.
ஆண்குழந்தையாக இருப்பின் அடுத்த மகவைப் பற்றிய பயம் இல்லாது
இருக்கலாம். அடுத்து பிறப்பது ஆணோ பெண்ணோ எனப் பதறும் அவசியமும், என்ன
குழந்தை எனப் பயமில்லாமலும் இருக்கலாம். இந்த எண்ணத்திலேயே
தவியாய்த் தவித்தார்.
ஆதவன் மெல்ல மெல்லத் தன் கரங்களை விரித்து வெளிச்சத்தைக் கொடுக்க
ஆரம்பித்தான், இருள் முற்றிலும் விலக வெளிச்சம் பரவலானது.
அந்த நேரத்தில் குழந்தையின் வரவு ஆரம்பமானது.
ராதாம்பிகையின் அழுகை சப்தம் கேட்கக் கேட்க, கணவனாய் தந்தையாய்
உள்ளம் துடிக்க, அவரது உதடுகள் விடாமல் சிவனின் நாமத்தை
சொல்லிக்கொண்டே இருந்தது, இம்முறை மனைவியின் ஆரோக்கியத்தை
நினைத்துப் பதறினார். எதுவோ ஒண்ணு நல்லபடியாக பிறக்கட்டும், என்ற
எண்ணம் உதித்தது அவருக்கு.
தாய் தகப்பனைப் படுத்தி எடுத்துவிட்டு இவ்வுலகை எட்டிப் பார்த்தது
மகாலட்சுமியின் அம்சமான அழகான பெண்குழந்தை.
சிறிது நேரத்தில் தாதி குழந்தையை அவர் கையில் கொண்டு வந்து
கொடுத்தார்.
"பெண்குழந்தை பிறந்திருக்கு, தாயும் சேயும் நலமா ஆரோக்கியமா
இருக்காங்க" அனைவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றார்
அவர்.
வரதாச்சாரியின் கரத்தில் இருந்த குழந்தையின் அழகில் அனைவரும்
மயங்கிப் போனார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப் பொலிவுடன் மின்னியது.
பெண்ணரசி தேவதையைப் போலவே குட்டி உதடுகளை நெளித்து
புன்னகையை அனைவருக்கும் கொடுக்க,அதில் மயங்கினார் வரதாச்சாரி,
ஒரு நிமிடம் ஆண்குழந்தை இல்லையே என்ற கவலையை மறந்து
என் மகள் இவள் என்ற கர்வமும் வந்தது.
அவருக்கு வயதின் காரணமாய் கைகளில் லேசாய் நடுக்கம் இருக்க, குழந்தையைக்
கையால் எடுக்க முடியாமல், மகன் கையில் இருந்த பேத்தியை எட்டிப்
பார்த்தார் அவரது தாய், "அடடா எத்தனை அழகா இருக்கா குழந்தை"
வரதாச்சாரியின் அம்மா கொஞ்சினார்.
“பையனா இருந்திருந்தா ரெட்டிப்பு சந்தோஷம் கிடைச்சிருக்கும் அம்மா.
பொண்ணாப் போயிட்டாளே. இனி அடுத்தது பிறந்து, ஒருவேளை அதுவும்
பொண்ணாவே போயிட்டா நான் என்ன பண்ணட்டும்?” வரதர் தன் மகளையே
பாசமாய் கண்களில் கனிவுடன் பார்த்தவாறு மனத்தாங்களுடன் சொன்னார்.
“அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காதேப்பா. பையனோ பொண்ணோ
ஆரோக்கியமாய் பிறந்திட்டான்னு சந்தோஷப்படனும் நாம. அதைவிட்டுட்டு
குழந்தை மேல வெறுப்பைக் கொட்டறது நல்லதுக்கு இல்லைப்பா” மகனைக்
கண்டித்தவர், “நம்ம வீட்டுலயே முதன் முதலா பிறந்த பெண்குழந்தை இது வரதா.
மூணு தலைமுறையா பொண்ணுங்க பிறக்கவே இல்லை. என்னவோ சாபம்னு
சொன்னாங்க. உன் அப்பா எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு அவர்
காலத்துல பிறக்கவே இல்லை. பரிகாரம் பண்ணியும் தப்புகள் நடந்தா அதுக்கு
மதிப்பே இருக்காதே.
உங்கண்ணனும் சும்மா இல்லை ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கிட்டான்..
அதுவும் யார்கிட்ட பகைச்சுக்கக் கூடாதோ அவங்ககிட்ட தீராத பகையை
வாங்கிக்கிட்டான். எனக்கென்னவோ அது இன்னும் முடியலைன்னுதான்
தோணுது” கண்கள் கலங்க வேதனையுடன் சொன்னவர், வடக்குப்பக்கம்
யோசனையாகப் பார்த்தார்.
“அண்ணனைத் தப்பாப் பேசாதீங்கம்மா. நமக்காக வாழ்க்கையையே தியாகம்
பண்ணியிருக்கார் அவர்” வரதர் தாயின் பேச்சை மறுத்தார்.
“அவனை தப்பா சொல்ல என்னப்பா இருக்கு. ஆண்கள் செய்யும் தப்புகளை
தப்புன்னு சுட்டிக்காட்டும் உரிமை பொண்ணுங்களுக்கு எங்க இருக்கு?.
எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கோம் நாங்களே. உங்கப்பா
காலத்தில் இருந்து உங்க காலம் வரைக்கும் நான் கேள்வி கேக்கக்காம
அடங்கி தானே போறேன். உன் அண்ணங்கிட்ட நின்னு பேசறதுக்கு
விடுவானா? உனக்கென்ன தெரியும்னு அடக்கிட்டு போய்டுவான்..
ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோப்பா.
நீ பண்ணியிருக்க புண்ணியமோ இல்ல ராதாவுக்கான அனுக்கிரகமோ
தெரியலைப்பா. இப்ப உனக்கு பொண்ணு பிறந்திருக்கு வரதா, வந்த
மகாலட்சுமியை வேணாம்னு சொல்லிட்டு தப்பு பண்ணிக்கிட்டு இருக்காதே.
தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க வேணாம் நீயும்” கண்டித்தார் நல்ல
தாயாய்.
“அதுவும் சரிதானம்மா. எல்லாம் பரமேஸ்வரின் விருப்பம்தான். நம்ம கையில்
என்ன இருக்கு? என் மகளை இளவரசியாய் வளர்த்திக் கொடு நீ. அதுபோதும்
எனக்கு” வரதர் வெளியே சந்தோஷமாக சொன்னாலும் மனதில்
வருத்தப்பட்டார்.
“நான் எதுக்கு இருக்கேன். ராணியாட்டம் வளருவா என் பேத்தி” பேத்தியை
செல்லம் கொஞ்சினார் பாட்டி.
அன்றே ராதாம்மாவை வேறு அறைக்குள் மாற்றிவிட்டனர், குழந்தையை
ராதாம்மா கையில் கொண்டு போய் வைக்க தன் மகளின் நெற்றியில் முத்தம்
பதித்தவர், “குழந்தை அழகா இருக்காங்க” சந்தோஷப்பட்டார்.
“ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன் ராதா” வரதர் கவலை நிறைந்த
புன்னகையுடன் சொன்னாலும் மகளின் கன்னத்தை செல்லமாய்த்
தட்டியவாறே கொஞ்சினார்.
“அதனால் என்னங்க? அடுத்த குழந்தை பையனா பெத்து தரேன்” ராதாம்மா
நிறைவான சிரிப்புடன் கணவனைத் தேற்றினார்.
ஒரு வாரம் செல்ல..
குழந்தையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்
வரதாச்சாரி. முறைப்படி பிறந்த வீட்டிற்குத்தான் ராதாம்மா செல்ல வேண்டும்.
ராதாம்மாவின் தாயார் வேதவதி அதற்கான ஏற்பாடுகளைத்தான்
செய்திருந்தார். ஆனால் தலைக்கணம் மிக்க ரங்காச்சாரியோ மறுத்துவிட்டார்.
“எங்க வீட்டுல வளரட்டும்” என புகுந்த வீட்டுக்கே வருமாறு கண்டிப்புடன்
சொல்லவே. ராதாவின் பெற்றவர்களுக்கு மனதுக்குள் வருத்தம் இருந்தாலும்
விட்டுக்கொடுத்துப் போனார்கள் பெருந்தன்மையாய்.
தங்கள் வீட்டின் மகாலட்சுமியை வரவேற்பதற்காய் அந்த வீடே
சந்தோஷமாய்க் காத்திருந்தது.
“ஏம்மா மருமகளே ஆரத்தியை கரைச்சு எடுத்துட்டியா?” கேட்டவாறே வீட்டு
வாசலில் கால் எடுத்து வைத்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி
விழுந்தார் ராதாம்மாவின் மாமியார்.
வந்த வண்டியிலேயே திரும்ப அழைத்துப் போய் சிகிச்சை செய்தும்
பலனில்லை இறந்து போனார் வரதரின் தாயார்.
நொடியில் அந்த வீட்டின் தோற்றங்களும் மனநிலைகளும் மாறிவிட, துக்க
வீடாக மாறிப் போனது. அதுமட்டும் இல்லாமல் துக்க வீடு என்பதால் பூஜை
அறையில் உள்ள தீபத்தை அமர்த்திவிடப் போக, பூஜை அறையில்
தீப்பிடித்தது கவனக்குறைவால்.
அது ஒருபக்கம் பரபரப்பாய் ஆனது. அது போதாதென தீக்காயமும் பட்டுவிட,
நடப்பதை எல்லாம் அவதானித்து இருந்த வரதரின் அண்ணா ரங்காச்சாரிக்கு
மனதில் நெருடல் எழுந்தது.
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை இவள். இவள்
வரவு குடும்பத்திற்கு நன்மையைத் தருமா? யோசனையில் ஆழ்ந்தவர்
யாரிடமும் பேசாமல் தன் தாயின் இறுதிக் காரியங்களை கவனிக்க
ஆரம்பித்தார். தாய்க்கு தலைப்பிள்ளை காரியம் செய்யவேண்டுமென்பது மரபு
ஆதலால் ரங்காச்சாரி தன் கவனத்தை திசை திருப்பினார் சற்று
நெருடலுடனேயே..
வந்திருப்பவர்களின் வாயில் அந்தக் குழந்தையின் நேரமும் ராசியுமே
அறைபட்டது. “பொண்ணு பிறக்கணும்னு தவமா தவம் இருந்தாங்க. ஆனா
பாரேன் பிறந்தும் ராசியில்லாம போயிடுச்சு.. இப்பவே இப்படின்னா நாளாக
ஆக இன்னும் என்னென்ன நடக்குமோ” இப்படி காதில் விழுமாறும்,
நேரடியாகவும் பேசப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை என்றால் குழந்தையின்
பெற்றோர்களுக்கோ நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போல
இருந்தது.
ஒவ்வொரு தாய்தகப்பனுக்கும் தான் உயிரைக் கொடுத்துப் பெற்ற குழந்தை
என்றால் அபூர்வம் அல்லவா. அவன் நல்லவனோ கெட்டவனோ
எப்படியிருந்தாலும் அவனுக்காக அடிமனது துடிக்கும்.
ராதாம்மாவுக்கும் வரதாச்சாரிக்கும் அப்படித்தான், இப்பொழுதுதான்
உலகத்தை எட்டி பார்த்திருக்கும் தன் குழந்தையின் நலனே பிரதானமாக
இருக்க, குழந்தையையும் மனைவியையும் எந்தக் கெட்ட சொல்லும் காதில்
விழாதவண்ணம் ராதாம்மாவின் தாய்வீட்டில் விட்டுவிட்டு வந்தார் வரதர்.
“திரும்ப அழைச்சிட்டுப் போக வருவீங்கதானே?” கண்களில்
அலைப்புறுதலோடு கேட்டார் ராதாம்மா. அவர் காதில் விழுந்த பேச்சுகள்
அப்படியிருக்க, அவரது சஞ்சலமும் நியாயமாகவே இருந்தது.
“நான் சிவனடியார் ராதா. எனக்கு நீதான் விசாலாட்சி. இந்த ஜென்மத்துக்கு
நீயே போதும். அடுத்த ஜென்மமே நமக்கு வேணாம்னு அந்த சிவனை
பிரார்த்திக்கறேன் அனுதினமும்” மனைவியிடம் சொன்ன வரதர் திரும்பியும்
பாராமல் சென்றார் மனைவியின் அழுத முகம் பார்க்கத் தெம்பில்லாமல்..
போகும் போது மனைவி மகளைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளச்
சொல்லிவிட்டுச் செல்லும் மாப்பிள்ளையைக் கவலையாய்ப் பார்த்தவர், “கை
நனைக்காம போறாரே மாப்பிள்ளை?” ராதாவின் தாய் வேதவதி
கவலையாய்க் கேட்டார்.
ஒரே மருமகன் அவருக்கு, உபசரிக்க விரும்பினார்.
தன் பெண் வசதி வாய்ப்பில்லாமல் இருக்கும் ஏழை அந்தணர் குடும்பத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதகமும் மனசும் பொருந்திப் போக ஊரே
மெச்சும்படி திருமணம் செய்துகொண்டார் என்று , மதிப்பும் மரியாதையும்
அதிகமாகவே இருந்தது அவருக்கு மருமகன் மீது.
“அவர் வீட்டில் காரியம் நடந்துட்டு இருக்கையில் நம்ம வீட்டில் விருந்து
சாப்பிடுவாரா வேதா? அடக்கம் பண்ணி முடிக்க வரை பச்சை தண்ணி கூடக்
குடிக்க கூடாது தெரியாதா உனக்கு?” சிவநாதர் மனைவிக்கு எடுத்துச்
சொன்னார்.
“அதுவும் சரிதான். நீ வாடா கண்ணா உனக்கு பாட்டி கதை சொல்றேன்” என
மார்போடு அணைத்துக்கொண்டார் குழந்தையை.
Last edited: